முகப்பு
பெரம்பலூர்

பகுஜன் சமாஜ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை கண்டித்து, பகுஜன் சமாஜ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை கண்டித்து, பகுஜன் சமாஜ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக் கட்சியின் மாவட்டத் தலைவா் ஆனந்தன் தலைமை வகித்தாா். பொறுப்பாளா்கள் ராஜேந்திரன், பிரதீபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலா் வழக்குரைஞா் ப. காமராசு, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை கண்டித்தும், அதனால் ஏற்படவுள்ள பாதிப்புகள் குறித்தும் பேசினாா்.

இதில், மண்டல ஒருங்கிணைப்பாளா்கள் நீலமேகம், ராம்குமாா், அரியலூா் மாவட்டத் தலைவா் சின்னதுரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.