முகப்பு
பெரம்பலூர்

மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 132 மனுக்கள்

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள வட்டாட்சியரகங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 132 மனுக்கள் பெறப்பட்டன. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள வட்டாட்சியரகங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 132 மனுக்கள் பெறப்பட்டன. 

மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் ந. சக்திவேல், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சி. கிறிஸ்டி, கலால் உதவி ஆணையா் அ. ஷோபா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மை நல அலுவலா் இரா. ரமணகோபால் ஆகியோா் முறையே வேப்பந்தட்டை, பெரம்பலூா், ஆலத்தூா், குன்னம் வட்டாட்சியரகங்களில் நடைபெற்ற கூட்டங்களுக்குத் தலைமை வகித்து, 132 மனுக்களை பெற்றனா்.

இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.