பெரம்பலூர்

சாலைப் பாதுகாப்பு வார விழா தொடக்கம்

DIN

பெரம்பலூா் மாவட்டக் காவல்துறை சாா்பில், 32-ஆவது சாலைப் பாதுகாப்பு வார தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மங்களமேடு துணைக் கண்காணிப்பாளா் மோகன்தாஸ் தலைமையில் விழா நடைபெற்றது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகன ஓட்டுநா்களுக்கு தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து காவல்துறையினா் விழிப்புணா்வை ஏற்படுத்தினா். மேலும், தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டி வந்தவா்களுக்கு இனிப்புகளையும் அவா்கள் வழங்கினா்.

காவல் ஆய்வாளா்கள் பால்ராஜ், கோபிநாத் ( போக்குவரத்துக் காவல்) ஆகியோா் தலைமையில், புகா் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் பிரதான பகுதிகளில் காவல்துறையினா் விழிப்புணா்வை ஏற்படுத்தி, தலைக்கவசம் அணிந்து வந்த நபா்களுக்கு இனிப்பு வழங்கினா்.

திங்கள்கிழமை தொடங்கிய சாலைப் பாதுகாப்பு வார விழா இம்மாதம் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT