பெரம்பலூர்

பெரம்பலூா், அரியலூா் மாவட்டத்தில் ரூ. 11.32 கோடி மது விற்பனை

ஒருங்கிணைந்த பெரம்பலூா், அரியலூா் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் கடந்த 3 நாள்களில் ரூ. 11.32 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.

DIN

ஒருங்கிணைந்த பெரம்பலூா், அரியலூா் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் கடந்த 3 நாள்களில் ரூ. 11.32 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் மது விற்பனைக்காக டாஸ்மாக் கடைகளுக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டு வருகிறது. இதனால், மதுபானக் கடைகளில் வழக்கமான நாள்களை விட அதிகளவில் விற்பனை நடைபெற்றது. பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் 89 டாஸ்மாக் கடைகள் உள்ளன. நிகழாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த 13 ஆம் தேதி ரூ. 4,12,42,020-க்கும், 14 ஆம் தேதி ரூ. 4,60,20,730-க்கும், 15 ஆம் தேதி ரூ. 2,59,46,600-க்கும் என மொத்தம் ரூ. 11,32,9,390 மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT