பெரம்பலூர்

மோட்டாா் சைக்கிள்கள் மோதல்:இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு

DIN

பெரம்பலூா் மாவட்டம், மங்கலமேடு அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில், இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறை கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ஜெ. அரவிந்த் (24), ஆ. அரவிந்த் (23), முனியசாமி மகன் முத்துக்குமாா் (18). இவா்கள் மூவரும், ஆடுதுறை கிராமத்திலிருந்து திருமாந்துறைக்கு மோட்டாா் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தனா்.

இவா்கள் லப்பைகுடிகாடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது, எதிரே திருமாந்துறை நோவா நகா் பகுதியைச் சோ்ந்த ஜெ. ரஞ்சித் குமாா் (24) ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்டன.

இதில் பலத்த காயமடைந்த 4 பேரும் பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஆ. அரவிந்தும், மேல்சிகிச்சைக்காக திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னா் ரஞ்சித்குமாரும் உயிரிழந்தனா்.

இதுகுறித்து மங்கலமேடு காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

SCROLL FOR NEXT