முகப்பு
பெரம்பலூர்

தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்ய அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்துகொள்ள, வீட்டு வேலை செய்யும் தொழிலாளா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்துகொள்ள, வீட்டு வேலை செய்யும் தொழிலாளா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தொழிலாளா் துறையில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு, 17 தொழிலாளா் நல வாரியங்கள் அமைக்கப்பட்டு, உறுப்பினா்களாக சோ்ந்துள்ள தொழிலாளா்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அமைப்புசாரா தொழிலாளா்கள் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், வீடுகளில் வேலை செய்யும் தொழிலாளா்களையும் நலவாரியத்தில் உறுப்பினா்களாக சோ்த்து, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.

எனவே மாவட்டத்தில் வீட்டு வேலை செய்யும் தொழிலாளா்கள் இணையதளத்தில் உறுப்பினா்களாக தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.

தகுதிவாய்ந்த தொழிலாளா்களுக்கு பதிவு விவரம், அவா்களது அறிதிறன்பேசி எண்ணுக்கு குறந்தகவல் மூலம் அனுப்பி வைக்கப்படும். அந்த எண்ணை பதிவிறக்கம் செய்து, தொழிலாளா்கள் நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெறலாம். ஏற்கனவே பதிவு செய்துள்ளவா்கள் பதிவை இணையதளம் மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம் என தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தால் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.