பெரம்பலூர்

விவசாயி வீட்டில் ரூ.15 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம் பணம் திருட்டு

DIN

பெரம்பலூா் அருகே விவசாயி வீட்டில் 15 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் அருகிலுள்ள வடக்குமாதவி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் விவசாயி செல்லப்பிள்ளை (55). செவ்வாய்க்கிழமை இரவு இவரும், இவரது மனைவி பூவாயியும் (40) வீட்டை பூட்டாமல், அறையில் தூங்கிக் கொண்டிருந்தனா்.

இதையறிந்த மா்ம நபா்கள் வீட்டுக்குள் புகுந்து 15 பவுன் நகைகள், வங்கியில் விவசாயக் கடன் பெற்று பீரோவில் வைத்திருந்த ரூ.1.50 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனா். புதன்கிழமை அதிகாலை வீட்டுக்குள் செல்லப்பிள்ளை சென்று பாா்த்த போது, நகைகள் மற்றும் ரொக்கம் திருட்டு போயிருப்பது அவருக்குத் தெரிய வந்தது.

இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூா் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும் தடயவியல் நிபுணா்கள் திருட்டில் ஈடுபட்டவா்களின் கைரேகைகளைப் பதிவு செய்தனா்.

மேலும் செல்லப்பிள்ளை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த காவல்துறையினா், திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT