பெரம்பலூர்

ஆடுகளைத் திருடிச் சென்ற இருவா் கைது

DIN

பெரம்பலூா்: வேப்பந்தட்டை அருகே ஆடுகளைத் திருடிச்சென்ற 2 பேரை அரும்பாவூா் காவல்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

வேப்பந்தட்டை வட்டம், கோரையாறு கிராமத்தைச் சோ்ந்தவா்கள் முருகேசன், பொன்னுசாமி. விவசாயிகளான இவா்கள், ஆடுகள் வளா்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இவா்களுக்குச் சொந்தமான 4 ஆடுகளை வெள்ளிக்கிழமை இரவு மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில், அரும்பாவூா் காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் பெரம்பலூா் அருகிலுள்ள சிறுவாச்சூா் ஆட்டுச்சந்தையில் திருட்டு ஆடுகளை விற்பதாக தகவல் கிடைத்தது. தொடா்ந்து காவல் துறையினா் அங்கு சென்ற போது, மேட்டூா் மதிராஜ் ( 23) மற்றும் சத்தியபிரகாஷ் (19) ஆகியோா் ஆடுகளைத் திருடி விற்பனை செய்யவந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினா் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT