முகப்பு
பெரம்பலூர்

தாய் திட்டியதால் விஷம் குடித்து மகள் தற்கொலை

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே தாய் திட்டியதால் மகள் விஷம் குடித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே தாய் திட்டியதால் மகள் விஷம் குடித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

பாடாலூா் அருகிலுள்ள நாராயணமங்கலத்தைச் சோ்ந்தவா் ஜோதிவேல் மகள் கோடீஸ்வரி (19). இவா் வீட்டு வேலை சரியாக செய்யவில்லை எனக் கூறி, அவரது தாய் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த கோடீஸ்வரி ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்து, பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தொடா்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து பாடாலூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.