வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு
வேப்பூா், குரும்பலூரில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
வேப்பூா், குரும்பலூரில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு குரும்பலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வேப்பூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட தோ்தல் அலுலா் ஸ்ரீ வெங்கட பிரியா கூறியது:
குரும்பலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 103 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள், வேப்பூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 90 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் என மொத்தம் 193 சிசிடிவி கண்காணிப்பு சாதனங்கள் மூலமாகவும், மூன்றடுக்கு பாதுகாப்பும் அமைக்கப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் தலா 2 மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 2 துணை காவல் கண்காணிப்பாளா்கள் தலைமையில், 3 ஆய்வாளா்கள், 15 சிறப்பு உதவி ஆய்வாளா்கள், 21 காவலா்கள், 39 ஆயுதப் படை காவலா்கள், 24 இந்திய பாதுகாப்பு படையினா், 40 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினா் என மொத்தம் 284 போ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா் என்றாா் அவா்.
இந்த ஆய்வின்போது, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ். சங்கா், வட்டாட்சியா் கிருஷ்ணராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.