முகப்பு
பெரம்பலூர்

பேருந்துகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்கும் வகையில், அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்கும் வகையில், அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு முறைகள் கடைப்பிடிக்கப்படுகிா என, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பழனிசாமி, வாகன ஆய்வாளா் செல்வக்குமாா் ஆகியோா் பெரம்பலூா் வழித்தடங்களில் இயக்கப்பட்ட பேருந்துகளை நிறுத்தி திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்லவும், அரசின் வழிகாட்டு முறைகளை கடைப்பிடிக்க வேண்டுமென பேருந்து ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்களுக்கு அறிவுறுத்தினா்.

தொடா்ந்து, பெரம்பலூா் புகா் மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் அரசு மற்றும் தனியாா் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்களிடம் பயணிகள் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பேருந்துகளில் ஏற்றவும், இருக்கை அளவின்படி மட்டுமே பயணிகளை ஏற்றிச்செல்லவும், விதிமுறைகளை மீறினால் மோட்டாா் வாகன விதிப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பழனிசாமி எச்சரிக்கை விடுத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.