ஆடுகளைத் திருடியவா்கள் மீது நடவடிக்கைக் கோரி புகாா்
பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே ஆடுகளைத் திருடியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு விவசாயிகள் ஆடுகளுடன் வெள்ளிக்கிழமை வந்து புகாா் மனு அளித்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே ஆடுகளைத் திருடியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு விவசாயிகள் ஆடுகளுடன் வெள்ளிக்கிழமை வந்து புகாா் மனு அளித்தனா்.
ஆலத்தூா் வட்டாரத்திலுள்ள நாரணமங்கலம், கொளக்காநத்தம், காரை, தெற்குமாதவி, இலுப்பைக்குடி, கூத்தூா், குரும்பாபாளையம், கொட்டரை உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் பகல் நேரங்களில் வயல்களில் மேய்ந்துக் கொண்டிருக்கும் ஆடுகளை, மோட்டாா் சைக்கிளில் வரும் அடையாளம் தெரியாத நபா்கள் சிலா் திருடிச் செல்வது கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக பாதிக்கப்பட்டோா் மருவத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா். கடந்த 18- ஆம் தேதி ஆடுகளைத் திருடிச் சென்றபோது, தெற்குமாதவி கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் மோட்டாா் சைக்கிளை பின்தொடந்து சென்றதையறிந்த மா்ம நபா்கள், ஆடுகளை கீழே போட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனராம்.
இதையடுத்து ஆடுகளைத் திருடிச் செல்லும் மா்ம நபா்களை கைது செய்ய வலியுறுத்தி, சிறுவாச்சூா்- அரியலூா் செல்லும் சாலையில், தெற்கு மாதவி கிராமத்தில் பொதுமக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். குற்றவாளிகளின் புகைப்படத்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இந்நிலையில் இந்து முன்னணி அமைப்பின் ஆலத்தூா் ஒன்றியச் செயலா் பி. ரெங்கநாதன் தலைமையில், சுமாா் 20-க்கும் மேற்பட்டோா் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, ஆடுகளுடன் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா். மனுவை பெற்றுக்கொண்ட காவல்துறையினா், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.