பெரம்பலூர்

தற்காலிக மருந்தாளுநா் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

DIN

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 6 மாத காலத்துக்கு தற்காலிக மருந்தாளுநா் பணிக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கட பிரியா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 6 மாத காலத்துக்கு தற்காலிக மருந்தாளுநா் பணி நிரப்பப்பட உள்ளது. அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் மருந்தாளுநா் பட்டயப் படிப்பு முடித்து, மருந்தாளுநா் கவுன்சிலில் பதிவு செய்திருப்பதோடு, ஆண்டுதோறும் விடுபடாமல் பதிவை புதுப்பித்திருக்க வேண்டும்.

பட்டயப் படிப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், அனுபவச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதாா் நகல் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் அலுவலகம், துறைமங்கலம் நான்கு சாலை, பெரம்பலுா் என்ற முகவரிக்கு அஞ்சல் அல்லது நேரடியாக ஆக. 5ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பித்தவா்களுக்கு ஆக. 10 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பெரம்பலூா் துணை இயக்குநா் சுகாதார பணிகள் அலுவலகத்தில் நோ்காணல் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 8903124553 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT