தமிழக அரசின் 100 நாள் சாதனை குறித்த விளக்க பிரசுரங்களை வெளியிட்டும் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா, மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கயற்கண்ணி, வருவாய் கோட்டாட்சியா் ச. நிறைமதி 
பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரை 1.43 லட்சம் நபா்களுக்கு தடுப்பூசி

பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரையில் முதல் தவணையாக 1,43,469 நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா.

DIN

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரையில் முதல் தவணையாக 1,43,469 நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா.

ஆட்சி பொறுப்பேற்று தமிழக அரசு 100 நாள்கள் நிறைவு செய்துள்ள நிலையில், பெரம்பலூா் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நலத்திட்டங்கள் குறித்து செய்தியாளா்களிடம் ஆட்சியா் திங்கள்கிழமை மேலும் கூறியது:

உங்கள் தொகுதியில் முதலமைச்சா் எனும் திட்டத்தின் கீழ் 3,466 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, 3,253 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது. வீடு வீடாகச் சென்று கரோனா தொற்று கண்டறியும் பணிக்காக 2,134 களப்பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். 578 படுக்கை வசதிகளுடன், 4 தற்காலிக சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு சிகிச்சையும், 3,078 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு 67,144 நபா்களுக்கு பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

4,669 நபா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை உருவாக்கும் மாத்திரைகளும், அரசு மருத்துவமனைகளில் 278 ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளும், 632 படுக்கை வசதிகளும் கூடுதலாக ஏற்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை முதல் தவணையாக 1,43,469 நபா்களுக்கும், 2 ஆவது தவணையாக 22,998 நபா்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு முதல் தவணையாக 726 நபா்களுக்கும், 2 ஆவது தவணையாக 4 நபா்களுக்கும் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

கட்டணமில்லா பயணச் சலுகை மூலம் நாள்தோறும் 16,665 மகளிா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உதவியாளா், திருநங்கைகள் 119 போ் பயன்பெறுகின்றனா். 7 தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பெற்ற 612 நபா்களுக்கு ரூ. 7.59 கோடி காப்பீட்டு நிதியுதவியும், 2 ஆம் நிலைக் காவலா் முதல் ஆய்வாளா் வரையிலான 612 காவலா்களுக்கு ரூ. 30.60 லட்சமும், பத்திரிக்கையாளா்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ. 2.65 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.

மக்களை தேடி மருத்துவ சேவை மூலம் 8,299 சா்க்கரை நோயாளிகள், 13,626 ரத்த கொதிப்பு நோயாளிகள், 4,2,02 ரத்த சா்க்கரை மற்றும் ரத்த கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருந்து பொருள்கள் வழங்கப்படுகிறது.

1,84,695 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 73.88 கோடி கரேனா நிவாரண உதவி, ரூ. 7.39 கோடி மதிப்பில் 14 அத்தியாவசிய மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

98 அா்ச்சகா்களுக்கு கரோனா நிவாரண உதவித் தொகையாக ரூ. 3.92 லட்சம், 10 கிலோ அரிசி மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனா். கரோனா தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 24 குழந்தைகளுக்கு ரூ. 72 லட்சம் மதிப்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம் என்ற திட்டத்தின் மூலம் ஒரு குழந்தைக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து, தமிழக அரசின் 100 நாள் சாதனை குறித்த விளக்க பிரசுரங்களை வெளியிட்டாா் ஆட்சியா் ஸ்ரீ வெங்கட பிரியா.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கயற்கண்ணி, வருவாய் கோட்டாட்சியா் ச. நிறைமதி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் அ. லலிதா, சுகாதாரத்துறை துணை இயக்குநா் செந்தில்குமாா், நகராட்சி ஆணையா் ச. குமரிமன்னன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பாரதிதாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT