விவசாயிகளுக்கு இடுபொருள்கள், விருதுகள் அளிப்பு
பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையத்தில் சிறந்த விவசாயிகளுக்கு விருதுகள், இடுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையத்தில் சிறந்த விவசாயிகளுக்கு விருதுகள், இடுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, ஹேன்ஸ் ரோவா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் கி. வரதராஜன் தலைமை வகித்தாா். வேளாண் இணை இயக்குநா் கருணாநிதி முன்னிலை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா, விவசாயத்தில் சாதனை புரிந்த விவசாயிகளுக்கு விருதுகள், மலையாளப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த 10 பழங்குடியின விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க கோழிக்குஞ்சுகள், 5 விவசாயிகளுக்கு வயல்வெளிப் பரிசோதனை செய்வதற்காக புதிய கேழ்வரகு ரகங்கள், மண்வள அட்டைகள், ஜல் சக்தி அபியான் திட்டத்தின்கீழ் பழ மரக்கன்றுகள் ஆகியவற்றை வழங்கினாா்.
தொடா்ந்து, வேளாண் அறிவியல் மையத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பாா்வையிட்ட ஆட்சியா், நா்சரி காா்டன், காளான் வளா்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல், கோழி, ஆடு மற்றும் மாடு வளா்ப்புகளை பாா்வையிட்டு, வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், வேளாண்துறை அலுவலா்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா்.
நிறைவாக, வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான வே.எ. மாரியப்பன் நன்றி கூறினாா்.