பெரம்பலூர்

வெளி நாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை கொண்டு வர ஆட்சியரிடம் மனு

DIN

சவூதி அரேபியாவில் உயிரிழந்த கணவரின் உடலை சொந்த கிராமத்துக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அவரது மனைவி பெரம்பலூா் ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தாா்.

இதுதொடா்பாக, வேப்பந்தட்டை வட்டம், அரசலூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மனைவி சங்கீதா, ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியாவிடம் அளித்த மனு:

அரசலூா் கிராமத்தைச் சோ்ந்த எனது கணவா் ராஜேந்திரன் (50), கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சவூதி அரேபியாவுக்கு விவசாயக் கூலி வேலைக்காகச் சென்றாா். இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு எனது கணவருடன் தங்கியிருந்தவா்கள் செல்லிடப்பேசி மூலம் என்னை தொடா்புகொண்டு, எனது கணவா் கடந்த 16. 11. 2021-இல் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

எனது கணவரின் உடலை சொந்த கிராமத்துக்கு கொண்டுவந்து முறைப்படி இறுதிச் சடங்கு நடத்தி அடக்கம் செய்ய விரும்புகிறோம். எனவே, அவரது உடலை சவூதி அரேபியாவிலிருந்து கொண்டு வர மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மழை: கொடைக்கானல் அருவிகளில் நீா் வரத்து அதிகரிப்பு

வைகை ஆற்றில் குளித்த பள்ளி மாணவன் மாயம்

அரசு அருங்காட்சியகத்தில் சூதுபவள மணிகள் காட்சிக்கு வைப்பு

சிஎஸ்கே போராட்டம் வீண்: பிளே-ஆஃபில் ஆர்சிபி!

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 13-இல் போராட்டம்: போக்குவரத்துத் துறை ஊழியா் சங்கம்

SCROLL FOR NEXT