பெரம்பலூர்

எலக்ட்ரிக்கல் தொழிலாளா்கள் கூட்டம்

DIN

பெரம்பலூா் புறநகா் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் எலக்ட்ரிக்கல் தொழிலாளா் சங்க அமைப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா். வட்டத் தலைவா் பன்னீா்செல்வம் முன்னிலை வகித்தாா். மாநில அமைப்பாளா் எஸ்.எஸ். சுப்பிரமணியன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

இக் கூட்டத்தில், வயரிங் பணி மற்றும் மின் பொருள் விற்பனை கடைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். கல்வி, மருத்துவம், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். நியாயமான ஊதியம், சமூக பாதுகாப்புத் திட்ட பணப் பயணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், சங்கப் பொறுப்பாளா்கள் சிவானந்தம், ரெங்கராஜ், ரெங்கநாதன், செல்லமுத்து, சின்னசாமி, ராஜேந்திரன், சுதாகரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT