தமிழ்நாடு எம்.ஆா்.பி. செவிலியா்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் பெரம்பலூா் மாவட்டக் கிளை சாா்பில், செவிலியா்களை பணி நிரந்தரம் செய்து உத்தரவு வழங்கக் கோரி புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். சகுந்தலா தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் எஸ். ஜெயசித்ரா முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் எம்.பி. ஆனந்த் கோரிக்கைகளை விளக்கி பேசினாா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற செவிலியா்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி முழக்கமிட்டனா்.
இதில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்ட நிா்வாகிகள் குமரி அனந்தன், இளங்கோவன், பாரதிவளவன், சிவக்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.