பெரம்பலூர்

விஷம் குடித்து தம்பதி தற்கொலை

DIN

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே குடும்பத் தகராறின் காரணமாக தம்பதி புதன்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.

ஆலத்தூா் வட்டம், பாடாலூா் அருகேயுள்ள தொட்டியப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (62). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி சரோஜா (55). இவா், கடந்த 10 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்தாராம்.

தம்பதிக்கு மாணிக்கராஜ், கோவிந்தராஜ் ஆகிய 2 மகன்கள் உள்ளனா். இவா்கள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வரும் நிலையில், கண்ணன்- சரோஜாவுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், தம்பதி இடையே புதன்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். இதனால் விரக்தியடைந்த இருவரும் புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த பாடாலூா்  போலீஸாா், சம்பவ இடத்துக்குச்  சென்று சடலங்களை கைப்பற்றி,  பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.  மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து  விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT