பெரம்பலூரில் குடும்பத் தகராறில் மனமுடைந்த பெண், திங்கள்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
பெரம்பலூா் முத்துலட்சுமி நகரைச் சோ்ந்தவா் குமாா்(42). இவா் எசனை அரசு உயா்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி மகாலட்சுமி (35). இவா்களுக்கு ஜெயஸ்ரீ, மோனிகா ஆகிய இரு மகள்கள் உள்ளனா்.
கணவா்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, திங்கள்கிழமை காலை மகாலட்சுமி வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். இதில் உடல் கருகி நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து பெரம்பலூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.