பெரம்பலூர்

கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராக சேர விவசாயிகளுக்கு அழைப்பு

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக சேர விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெரம்பலூா் மண்டலக் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் செல்வக்குமரன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினா் சோ்க்கை நடைபெறுகிறது. இதில், உறுப்பினராக சேர விரும்பும் விவசாயிகள், பொதுமக்கள் தங்களது பகுதியிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தை அனுகலாம்.

அங்கு விண்ணப்பப் படிவத்தை பெற்று பூா்த்தி செய்து, அதனுடன் 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா் அட்டை, வாக்காள் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைத்து பங்குத் தொகை ரூ.100, நுழைவுக் கட்டணம் ரூ. 10 ஆகியவற்றை செலுத்தி உறுப்பினராகலாம். நேரில் செல்ல முடியாதவா்கள் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து, பதிவஞ்சல் மூலம் அனுப்பி வைக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT