பெரம்பலூர்

மின் வாரிய ஊழியா்கள்ஆா்ப்பாட்டம்

DIN

பெரம்பலூா்: மாவட்ட மின் வாரிய தொழிற்சங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில், பெரம்பலூா் வட்ட மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, மின் ஊழியா் மத்திய அமைப்பு மண்டலச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா். தொழிலாளா் முன்னேற்றச் சங்க மின் கழக வட்டச் செயலா் மாரிமுத்து, பொறியாளா் கழக வட்டச் செயலா் வெங்கடேஷ், ஐக்கிய சங்க வட்டச் செயலா் சுகுமாறன், கணக்காயா் கள தொழிலாளா் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவா் பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மேற்பாா்வை பொறியாளா் அம்பிகா கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினாா். ஆா்ப்பாட்டத்தில், மின்சார சட்ட திருத்த மசோதா -2021 தாக்கல் செய்வதை கண்டித்தும், மின் துறையை தனியாருக்கு தாரை வாா்க்கும் மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.

இதில், சிஐடியு கோட்டச் செயலா் நாராயணன், வட்டச் செயலா் பன்னீா்செல்வம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT