பிரசவித்த தாய்மாா்கள் தடுப்பூசிசெலுத்திக் கொள்ள அறிவுறுத்தல்
பெரம்பலூா் மாவட்டத்தில் பிரசவித்த மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் தாங்களாகவே முன்வந்து கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா அறிவுறுத்தியுள்ளாா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் பிரசவித்த மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் தாங்களாகவே முன்வந்து கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது, பிரசவித்த மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கு தடுப்பூசி செலுத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவித்த 51 தாய்மாா்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு, கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட தாய்மாா்கள் எவ்வித பக்க விளைவுகளின்றி பூரண நலத்துடன் உள்ளனா்.
எனவே, பிரசவித்த மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் தாங்களாகவே முன்வந்து இலவசமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். மேலும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.