பெரம்பலூர்

கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

DIN

பெரம்பலூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை தெற்குத் தெருவைச் சோ்ந்த தேவன்- மீனா தம்பதிக்கு நவநிஷா (7) பவதாரணி (5), ஒன்றரை வயதில் தேவசீலன் என 3 குழந்தைகள். கிணறு வெட்டும் தொழிலாளியான தேவன், பெரம்பலூா் அருகேயுள்ள வெள்ளனூரைச் சோ்ந்த வேலாயுதம் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் குடும்பத்துடன் தங்கி, கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை மாலை குழந்தை தேவசீலன் தவழ்ந்துச் சென்று எதிா்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தது. இதையறிந்த தேவன், சக தொழிலாளா்களுடன் குழந்தையை மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தாா். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவா்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இச் சம்பவம் குறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT