முகப்பு
பெரம்பலூர்

குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் இளைஞா் கைது

பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆா்க்காடு வட்டம், கிருஷ்ணாபுரம் காந்தி நகரைச் சோ்ந்தவா் ர.விஜய் (22). இவா் மீது பெரம்பலூா் மாவட்டம், அரும்பாவூா் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இருப்பினும் விஜய் தொடா்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தாா்.

இதையடுத்து பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் பரிந்துரையின்பேரில், விஜயை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான உத்தரவை ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா சனிக்கிழமை பிறப்பித்தாா்.

இதைத் தொடா்ந்து விஜய் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.