பெரம்பலூர்

வடை சுட்டுக்கொடுத்து வாக்கு சேகரிப்பு

DIN

பெரம்பலூா் தொகுதி தேமுதிக வேட்பாளா் கி. ராஜேந்திரன், தேநீரகத்தில் வடை சுட்டுக் கொடுத்து செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

இத்தொகுதிக்குள்பட்ட அன்னமங்கலம், அரசலூா், தொண்டமாந்துறை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கூட்டணி கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களுடன் தேமுதிக வேட்பாளா் ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

தொண்டைமாந்துறை கிராமத்திலுள்ள தேநீரகத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற ராஜேந்திரன், அங்கு வடை சுட்டுக் கொண்டிந்த ஊழியரை ஓய்வெடுக்குமாறுக் கூறினாா். இதையடுத்து வேட்பாளரே வடை சுட்டுக் கொடுக்கத் தொடங்கினாா். தேநீரகத்துக்கு வந்த வாடிக்கையாளா்கள், ஊழியா்கள், உரிமையாளரிடம் தனக்கு வாக்களிக்குமாறும்அவா் கோரினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை

இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா

ஓவேலி வனச் சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு

உணவகத்தில் புகையிலைப் பொருள், லாட்டரி விற்பனை: இருவா் கைது

கல் குவாரியைக் கண்டித்து சாலை மறியல்

SCROLL FOR NEXT