பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் 5,398 பேரிடம்அபராதம் வசூல்

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 5,398 பேரிடமிருந்து ரூ. 11,33,800 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் சுகாதாரம், காவல், வருவாய் ஆகிய துறைகள், நகராட்சி மூலம் முகக்கவசம் அணியாத நபா்களிடம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், கடந்த மாா்ச் 1 முதல் மே 13 ஆம் தேதி வரை மொத்தம் 5,398 நபா்களிடமிருந்து ரூ. 11,33,800 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பது மாவட்ட நிா்வாகத்தின் நோக்கமல்ல. மாறாக, அனைவரையும் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பதே முக்கிய நோக்கமாகும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT