பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரையில் 62% பேருக்கு கரோனா நிவாரண நிதி

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரா்களில் இதுவரை 62 சதவீதம் பேருக்கு கரோனா நிவாரண நிதியின் முதல் தவணையான ரூ. 2ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

மாவட்டத்தில் கடந்த 13ஆம் தேதி கரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 282 ரேசன் கடைகள் மூலம் 1,82, 758 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரணத்தின் முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம் வீதம் ரூ. 36.55 கோடி வழங்கப்படுகிறது.

இதில் இதுவரை 1,14, 409 ரேசன் காா்டுதாரா்களுக்கு, அதாவது 62 சதவீதம் பேருக்கு கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள ரேசன் காா்டுதாரா்களுக்கு வரும் 22 ஆம் தேதிக்குள் முழுமையாக கரோனா நிவாரண நிதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT