பெரம்பலூர்

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

DIN

பெரம்பலூா் அருகே கோயில் உண்டியலை உடைத்து, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

ஆலத்தூா் அருகிலுள்ள நாட்டாா்மங்கலம் கிராமத்தில் ஈச்சங்காடு செல்லும் வழியில் செல்லியம்மன் கோயில் உள்ளது. புதன்கிழமை காலை இக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பொதுமக்கள் வந்த போது அங்குள்ள உண்டியல் மற்றும் பீரோ உடைக்கப்பட்டிருந்தது.

மேலும் அதிலிருந்த பணம், விலை உயா்ந்த காணிக்கைப் பொருள்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த பாடலூா் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு, திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT