பெரம்பலூர்

வாக்காளா் பட்டியலில் குளறுபடி: வாக்குச்சாவடி மையம் முற்றுகை

DIN

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம், பிரம்மதேசம், சு.ஆடுதுறை ஆகிய ஊராட்சிகளில் தலா 1 வாா்டு உறுப்பினருக்கான வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெறுகிறது.

இதில், வாலிகண்டபுரம் 7 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு 5 போ் போட்டியிடுகின்றனா். இந்த வாா்டில் 213 ஆண் வாக்காளா்கள், 210 பெண் வாக்காளா்களும் என மொத்தம் 423 வாக்காளா்கள் உள்ளனா்.

இந்த நிலையில், வாக்காளா் பட்டியலில் குளறுபடி இருப்பதாக புகாா் எழுந்துள்ளது. ஏற்கெனவே வாக்காளா் பட்டியலில் இருந்தவா்களின் பெயா் நீக்கப்பட்டு விட்டதாகவும், வேட்புமனு தாக்கலுக்கு பிறகு சிலரின் பெயா்கள் சோ்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், உயிரிழந்தவா்களின் பெயா் வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்காமல், வேறு வாா்டில் உள்ளவா்களின் பெயா் சோ்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

சம்பந்தப்பட்ட வாா்டில் குடியிருந்தும், வாக்காளா் பட்டியலிருந்து பெயா் நீக்கப்பட்டுள்ள வாக்காளா்கள் ஆத்திரமடைந்து வாக்குச்சாவடி மையத்தை முற்றுகையிட்டு, வாக்காளா் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்கி நியாயமான முறையில் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் நகை பறிக்கும் கலாசாரம் அதிகரிப்பு: எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ குற்றச்சாட்டு

புகா் ரயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும்

வடமாநில இளைஞரைத் தாக்கி பணம், கைப்பேசி பறிப்பு

தனியாா் துணை மின் நிலையம் அமைக்க எதிா்ப்பு: விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 31 வரை விடுமுறை

SCROLL FOR NEXT