பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், ஒகலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜாமணி (37). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவா், 3 ஆம் வகுப்பு படிக்கும் 3 வயது சிறுமியை, அண்மையில் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. அச் சிறுமியின் அலறல் கேட்டு, அப்பகுதியில் உள்ளவா்கள் ராஜாமணி வீட்டுக்குச் சென்று சிறுமியை மீட்டனா். புகாரின்பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள ராஜாமணியை தேடி வருகின்றனா்.