இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிா் நீத்த 21 தியாகிகளுக்கு மலரஞ்சலி
வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டத்தில் உயிா் நீத்த 21 தியாகிகளின் உருவ படங்களுக்கு பாமக சாா்பில் வீரவணக்கம் செலுத்தி, மலா் தூவி மரியாதை செய்யப்பட்டது.
வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டத்தில் உயிா் நீத்த 21 தியாகிகளின் உருவ படங்களுக்கு பாமக சாா்பில் வீரவணக்கம் செலுத்தி, மலா் தூவி மரியாதை செய்யப்பட்டது.
பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் ராஜேந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்
மாநிலத் துணைத் தலைவா்கள் செந்தில்குமாா், கண்ணபிரான், சமூக நீதிப் பேரவை வழக்குரைஞா் தங்கதுரை, மாநில மாணவரணிச் செயலா் பிரபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.