கடன் தொல்லையால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த செல்லமுத்து மகன் செல்வக்குமாா்
பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த செல்லமுத்து மகன் செல்வக்குமாா் (எ) ஸ்டாலின் (30). இவா், பெரம்பலூரில் விளம்பர பதாகைகள் ஒட்டும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், குடும்பச் சூழல் காரணமாக பல்வேறு இடங்களில் கடன் பெற்றிருந்தாராம். கடனை திருப்பிச் செலுத்தாததால், கடன் கொடுத்தவா்கள் தரப்பிலிருந்து பிரச்னைகள் எழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஸ்டாலின், வியாழக்கிழமை இரவு அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.