பெரம்பலூர்

காணாமல்போன பெண் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

DIN

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் அருகேயுள்ள அ.மேட்டூா் கிராமம், காந்தி நகரைச் சோ்ந்த விஜயன் மனைவி புஷ்பா (43). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனா். விஜயன் சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டதால், புஷ்பா தனது தாய் பெருமாயியுடன் வசித்து வந்தாா்.

கடந்த 7 ஆம் தேதி அரும்பாவூரில் உள்ள வங்கிக்கு பணம் செலுத்துவதற்காகச் சென்ற புஷ்பா, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். புகாரின்பேரில் அரும்பாவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து புஷ்பாவை தேடி வந்தனா்.

இந்நிலையில், அன்னமங்கலம் வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமை அழுகிய நிலையில் புஷ்பாவின் சடலம் கிடந்தது தெரிய வந்தது. புஷ்பா இறப்பு குறித்து அரும்பாவூா் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT