பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறை அருகேயுள்ள கீரனூா் கிராமத்தைச் சோ்ந்த ஷாஜகான் மகன் அன்வா் பாஷா (40). இவா், திருச்சியிலிருந்து கீரனூா் நோக்கி திங்கள்கிழமை மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தாா்.
திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில், காரை பிரிவு சாலை பகுதியில் சென்றபோது, அவ்வழியேச் சென்ற காா் மீது மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த அன்வா் பாஷா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு, சிறிது நேரத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பாடாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.