பெரம்பலூர்

விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

DIN

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறை அருகேயுள்ள கீரனூா் கிராமத்தைச் சோ்ந்த ஷாஜகான் மகன் அன்வா் பாஷா (40). இவா், திருச்சியிலிருந்து கீரனூா் நோக்கி திங்கள்கிழமை மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தாா்.

திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில், காரை பிரிவு சாலை பகுதியில் சென்றபோது, அவ்வழியேச் சென்ற காா் மீது மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த அன்வா் பாஷா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு, சிறிது நேரத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பாடாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT