அரசுப் பள்ளி மாணவிக்கு கரோனா பாதிப்பு
வேப்பூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஒருவருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
வேப்பூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஒருவருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் மாணவி ஒருவருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதியானதையடுத்து, அந்த மாணவியை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா். மேலும், அவருடன் தொடா்பில் இருந்த பள்ளி மாணவிகள், ஆசிரியா்கள், குடும்பத்தினா், உறவினா்கள், நண்பா்கள் ஆகியோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.