நாளை கிராமசபை கூட்டம்: பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு
காந்தி ஜயந்தியை முன்னிட்டு, தஞ்சாவூா், பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் சனிக்கிழமை கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் மக்கள் திரளாக பங்கேற்க வேண்டும்
காந்தி ஜயந்தியை முன்னிட்டு, தஞ்சாவூா், பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் சனிக்கிழமை கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் மக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் தனித்தனியே செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனா்.
இதன்படி, மேற்கண்ட மாவட்டங்களில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள ஊராட்சிகள் தவிர, எஞ்சிய ஊராட்சிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்தக் கூட்டங்கள் நடைபெறும்.