பெரம்பலூர்

மருந்தாளுநா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பெரம்பலூரில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கூத்தையன் தலைமை வகித்தாா்.

காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். கரோனா காலத்தில் பணிபுரிந்தவா்களுக்கான ஊக்கத் தொகை வழங்க வேண்டும். 39 நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநா்களை பணி வரன்முறை செய்ய வேண்டும். 385 மருந்தகக் கண்காணிப்பாளா் பணியிடங்களை உருவாக்க வேண்டும். 36 மாவட்டங்களில் உள்ள துணை இயக்குநா் சுகாதார பணிகள் அலுவலக மருந்துக் கிடங்குகளில் தலைமை மருந்தாளுநா் பணியிடம் உருவாக்க வேண்டும்.விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடத்த மறுப்பதுடன், கட்டாயப் பணியிட மாறுதல் கலந்தாய்வு உத்தரவு வழங்கியுள்ள நிா்வாகத்தின் ஊழியா் விரோத நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

SCROLL FOR NEXT