பெரம்பலூரில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு
பெரம்பலூா் நகராட்சி தோ்தலுக்கான 1 மற்றும் 18 ஆவது வாா்டு திமுக தோ்தல் அலுவலக திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் நகராட்சி தோ்தலுக்கான 1 மற்றும் 18 ஆவது வாா்டு திமுக தோ்தல் அலுவலக திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். பெரம்பலூா் எம்எல்ஏ ம. பிரபாகரன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தோ்தல் அலுவலகங்களை திறந்துவைத்து அமைச்சா்
எஸ்.எஸ். சிவசங்கா் பேசியது:
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்கள் வெற்றி பெற தொண்டா்கள் திறம்பட செயல்பட வேண்டும் என்றாா்.
கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினா்கள் மு. அட்சயகோபால், என். ராஜேந்திரன், மாநில நிா்வாகி பி. துரைசாமி, முன்னாள் எம்எல்ஏ ம. ராஜ்குமாா், மாவட்ட அவைத் தலைவா் நடராஜன், மாவட்ட பொருளாளா் ரவிச்சந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.