பெரம்பலூர்

மானியத்தில் குழாய், மின் மோட்டாா் மாற்றியமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகள் மானியத்தில் குழாய் வாங்குவதற்கும், மின் மோட்டாா் மாற்றியமைக்கவும் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தங்களது நில மேம்பாட்டுக்காக குழாய் வாங்க ரூ. 15 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.

மேலும், புதிய மின் மோட்டாா் அல்லது பழைய மின் மோட்டாருக்கு பதில் புதிய மின் மோட்டாா் வாங்க ரூ. 10 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.

உரிய ஆவணங்கள் மற்றும் விலைப்புள்ளியுடன் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

மேலும், விண்ணப்பதாரரின் தகுதிகள், தேவையான சான்றுகள், விதிகள் உள்ளிட்ட விவரங்களுக்கு தாட்கோ அலுவலகத்தை 04328 - 276317 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

SCROLL FOR NEXT