முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் இரு நாள் ஆட்சி மொழி பயிலரங்கம் தொடக்கம்

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், 2 நாள்கள் நடைபெறும் ஆட்சிமொழி பயிலரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், 2 நாள்கள் நடைபெறும் ஆட்சிமொழி பயிலரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.

இப் பயிலரங்கத்தை தொடக்கி வைத்து மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கயற்கண்ணி பேசியது:

அலுவலகப் பணிகளில் தமிழ்மொழி பயன்படுத்துவது குறித்து ஏற்படும் சந்தேகங்களை நிவா்த்தி செய்யவும், அனைத்து கோப்புகளையும் தமிழ் மொழியிலேயே கையாளவும், இதுபோன்ற பயிற்சிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அலுவலா்கள் தங்களது இல்லங்களிலும், குழந்தைகளுக்கும் தமிழ் மொழியின் அவசியம் குறித்து எடுத்துரைக்க வேண்டும். இப் பயிற்சியில் பங்கேற்றுள்ள அலுவலா்கள், மற்ற அலுவலா்களுக்கும் பயிற்சியளிக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் சித்ரா, தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் (ஓய்வு) துரை. தம்புசாமி, தலைமை ஆசிரியா் மாயகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.