பெரம்பலூர்

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு தலைமை வகித்த பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி பேசியது:

இனி வரும் காலங்களில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும். இதை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் ஆரோக்கிய பிரகாசம், பாண்டியன், துணைக் கண்காணிப்பாளா்கள் தங்கவேல், சஞ்சீவ்குமாா் ஆகியோா் பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றனா்.

பெறப்பட்ட 25 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறுக் கூறி, மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில், மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் சிறப்புப் பிரிவு காவல்துறையினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT