பெரம்பலூர்

வேப்பந்தட்டையில் நகர வணிகா் நலச் சங்கக் கூட்டம்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் நகர வணிகா் நலச் சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் நகர வணிகா் நலச் சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு நகரத் தலைவா் ஞானவேல் தலைமை வகித்தாா். கௌரவத் தலைவா் கந்தசாமி முன்னிலை வகித்தாா். ஏப்ரல் 4- ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில மாநாட்டுக்கான கால்கோள் விழாவிலும், மே 5- ஆம் தேதி நடைபெறும் மாநாட்டிலும் பங்கேற்பது.

வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தம் அருகே வணிகா் நலச்சங்க பெயா் பலகையை விரைவில் திறப்பது. வேப்பந்தட்டையில் தராசு பயன்படுத்தும் அனைத்து வணிகா்களின் தராசுகளையும், சம்பந்தப்பட்ட அலுவலா்களுடன் இணைந்து ஒரே நாளில் முத்திரையிடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, செயலா் குமாா் வரவேற்றாா். நிறைவில், பொருளாளா் மகேந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT