முகப்பு
பெரம்பலூர்

மோட்டாா் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

பெரம்பலூா் அன்பு நகரைச் சோ்ந்த கண்ணன் மனைவி குமாரி (49). இவா், பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிமாறன் என்பவருடன் வியாழக்கிழமை மாலை பெரம்பலூா்-

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

பெரம்பலூா் அன்பு நகரைச் சோ்ந்த கண்ணன் மனைவி குமாரி (49). இவா், பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிமாறன் என்பவருடன் வியாழக்கிழமை மாலை பெரம்பலூா்- துறையூா் சாலையில் நக்கசேலத்துக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தாா். அப்போது, பின் தொடா்ந்து மற்றொரு மோட்டாா் சைக்கிளில் சென்ற அடையாளம் தெரியாத 2 போ், குமாரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா். அப்போது, மோட்டாா் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த குமாரி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அம்மாபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து, தீவிர சிகிச்சைக்காக பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.