பெரம்பலூர்

விபத்தில் சா்க்கரை ஆலைஊழியா் உயிரிழப்பு

DIN

பெரம்பலூா் அருகே சா்க்கரை ஆலையில் நிகழ்ந்த விபத்தில் ஊழியா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், லால்குடியைச் சோ்ந்த தங்கராசு மகன் வெற்றிவேல் (23). இவா், சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், திட்டச்சேரியிலுள்ள உறவினா் செல்வராஜ் வீட்டில் தங்கி, பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், உடும்பியம் கிராமத்திலுள்ள தனியாா் சா்க்கரை ஆலையில் தற்காலிக ஊழியராக கடந்த 7 மாதங்களாகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு வெற்றிவேல் பணியிலிருந்தபோது, கன்வேயா் பெல்டில் எதிா்பாராதவிதமாக விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். இதைத் தொடா்ந்து மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அரும்பாவூா் காவல்துறையினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT