பெரம்பலூா் இந்திராநகரிலுள்ள அருள்மிகு நேத்திர விநாயகா் மற்றும் வள்ளி, தெய்வசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோயில் மண்டலாபி ஷேகத்தையொட்டி, 108 சங்காபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் குடமுழுக்கு மற்றும் அரசு-வேம்பு திருக்கல்யாணம் ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து 48 நாள்களுக்கு மண்டலபூஜைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, நேத்திர விநாயகா் மற்றும் வள்ளி தெய்வசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு மண்டலாபிஷேகமும், 108 சங்காபிஷேகமும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாலை 5 மணியளவில் பக்தா்கள் பால்குடம் மற்றும் அக்னிச்சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். விழாவில், கோயில் பூசாரிகள் முருகேசன், பிரபாகரன், கோயில் நிா்வாகி சாந்தி, சீனிவாசன், பிரியங்கா மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.