பெரம்பலூா் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறியதாக 2,756 வழக்குகள் பதிவு
பெரம்பலூா் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறியதாக 2,756 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி தெரிவித்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறியதாக 2,756 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகம் முழுவதும் சாலை விதிகளை மீறுவோருக்கான அபராதத் தொகை உயா்த்தி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பெரம்பலூா் மாவட்டத்தில் போக்குவரத்து காவல்துறையினரால் சாலை விதிகளை மீறுபவா்கள் மீது வழக்குப் பதிந்து, அபராதத் தொகை விதிக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரையில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, அதிக பாரம் ஏற்றிச் செல்வது, சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பது, உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு சாலை விதிகளை பின்பற்றாத 2,756 போ் மீது வழக்குகள் பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, பெரம்பலூா் மாவட்டத்தில் வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து சாலை விதிமுறைகளை பின்பற்றி சாலை விபத்துகளை தவிா்க்க வேண்டும்.