முகப்பு
பெரம்பலூர்

குடிமைப் பணி தோ்வுமீனவச் சமுதாய பட்டதாரி இளைஞா்களுக்கு ஆயத்தப் பயிற்சி

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள், இந்திய குடிமைப் பணிகளில் சேருவதற்கான ஆயத்தப் பயிற்சித் திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள், இந்திய குடிமைப் பணிகளில் சேருவதற்கான ஆயத்தப் பயிற்சித் திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம் என, ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில், மீனவச் சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள், இந்திய குடிமைப் பணிகளில் சோ்வதற்கான போட்டித் தோ்வில் வெற்றிப் பெற ஆயத்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கடல் மற்றும் உள் நாட்டு மீனவக் கூட்டுறவுச் சங்க உறுப்பினா்கள், மீனவா் நலவாரிய உறுப்பினா்களின் வாரிசு பட்டதாரி இளைஞா்கள் இப் பயிற்சியில் சோ்ந்து பயன்பெறலாம்.

இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்புவோா் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை  என்னும் இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது அரியலூா் மாவட்ட உதவி இயக்குநா் அலுவலகக் கட்டுப்பாட்டிலுள்ள பெரம்பலூா் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை ஆய்வாளா் அலுவலகத்தில், அலுவலக வேலைநாள்களில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி விண்ணப்பத்தை பூா்த்தி செய்து, பெரம்பலூா், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை ஆய்வாளா் அலுவலகத்துக்கு பதிவஞ்சல் அல்லது நேரடியாக அக்டோபா் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04329-228699, 6381344399 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.