பெரம்பலூர்

குடும்பப் பிரச்னை:பெண் தூக்கிட்டு தற்கொலை

DIN

பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் மனமுடைந்த பெண் தூக்கிட்டு வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள பேரளி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் அறிவழகன் மனைவி பாரதி. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனா்.

குடும்பப் பிரச்னை காரணமாக, தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை காலை குழந்தைகள் பள்ளிக்கும், கணவா் அறிவழகன் வயலுக்கும் சென்றிருந்தபோது, வீட்டில் தனியாக இருந்த பாரதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்த மருவத்தூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, அவரது உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 4-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு

இந்தியாவில் 1.8 லட்சம் கணக்குகளை முடக்கிய எக்ஸ் சமூக வலைதளம்!

அதிசயம் நடக்கும், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்: ஷுப்மன் கில்

பிரதமர் மோடியின் தேர்தல் உரைகள் "வெற்றுப் பேச்சுகளே" - பிரியங்கா காந்தி

‘எலெக்‌ஷன்’ பட டிரைலரை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

SCROLL FOR NEXT