பெரம்பலூரில் சிஐடியு தொழில் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில், சிஐடியு தொழில்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில், சிஐடியு தொழில்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் பி. ரமேஷ் முன்னிலை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றம் செய்து, தொழிலாளா் சட்ட திருத்தத்துக்கு குரல் வாக்கெடுப்பு மூலம் ஆதரவு தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றிய மாநில அரசை கண்டித்தும், தொழிலாளா் விரோத தொழில்சாலை திருத்தச் சட்டத்தை கைவிடக் கோரியும் முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் ரெங்கநாதன், மாவட்ட துணைத் தலைவா்கள் கருணாநிதி, சிவானந்தம், விவசாய சங்க மாவட்டச் செயலா் ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினா்கள் செல்லமுத்து, வரதராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.